Tuesday, August 12, 2008

ஹைதராபாதில் இன்னுமொரு மழைக்காலம்....

மழையும் நானும்...., என்னை வரவேற்க வந்த மழை.... & கேரளாவிலும் என்னை வரவேற்ற மழை.... வாசித்துவிட்டு இதை வாசிக்கவும்... நன்றி...

இந்த மாநகரத்தில் நான் கால் வைத்து ஒரு வருடம் தாண்டியாகிவிட்டது.... கடந்த வருடம் என்னிடம் Bike இல்லை.... மழையும் குறைவு.... அதனால் மழைக்காலம் என்னை அதிகம் வதைக்கவில்லை.... இம்முறை மேற்கூறிய இரண்டும் மாறியதால் இங்கு நான் மழையை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.... தினம் தினம் மழையில் நனைவது வழக்கம் ஆகிவிட்டது.... அதிலும் நாங்கள் வீடு மாறியபோது உண்டான அனுபவம் மற்றவற்றை சிறுமை படுத்திவிட்டது....

ஒரு வருடத்தில் நாங்கள் மாறும் மூன்றாவது வீட்டுக்கு மாறின போது உண்டான அனுபவம் தான் இது.... பகலெல்லாம் வேறு வேலை (நான் கிரிக்கெட் ஆட போனேன்.... என்னுடன் வாழும் நண்பர்கள் தூங்கினார்கள்) பார்த்துவிட்டு சாயங்காலம் 6:30 மணிக்கு நாங்கள் Lorry பார்க்க போனோம்.... ஒருவன் கிடைத்தான்.... அவன் ஆயிரம் ரூபாய் கேட்டான்.... முடியாது, அது ரொம்ப அதிகம் என்று சொன்ன போது.... மழை பெய்யும் போல் உள்ளது.... இருட்டியும் விட்டது என்றான்.... நாங்களும் சம்மதித்தோம்.... அவர் வாய்முஹுர்த்தம்.... நான் அங்கிருந்து புறப்படும் முன்பே மழையும் பெய்தது.... லேசாகவா பெய்தது.... இல்லை வானம் பொழிந்தது....

கொட்டும் மழையில் நாங்கள் பொருட்களை தெருக்கோடியில் நின்ற Lorry இல் ஏற்றினோம்.... மூன்று கட்டில், ஒரு Cooler, இரண்டு மேஜைகள், தொலைக்காட்சி, கணினி இப்படி அத்தனை பொருட்களையும் நாங்கள் மூன்று பேருமே ஏற்றினோம்.... என் அப்பா சொல்வார், மழையில் நன்றாக நனைந்தால் ஒன்றுமே செய்யாது.... லேசாக நனைந்தால் தான் ஜலதோஷம் வரும் என்று. அதை மனதில் வைத்தே நான் நன்றாக நனைந்தேன்.... அவர் சொன்னதிலும் உண்மை இருந்தது.... ஒரு மணி நேரம் தொடர்ந்து மழையில் நனைந்தும் எனக்கு ஒன்றும் செய்யவில்லை.... நன்றி மழையே, இம்முறை நீ என் நம்பிக்கையை முறிக்கவில்லை....

பாவி செல்லும் இடம் பாதாளம் என்று மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு.... அதுபோல் என் விஷயத்தில் நம்பிக்கையை காத்த மழை, என் கட்டில் விஷயத்தில் என் காலை வாரி விட்டது.... Lorry இல் கொண்டு வந்த போது மேலே அவர் ஏதோ ஒரு Sheet வைத்து மூடித்தான் வைத்திருந்தார். ஆனால் அந்த sheet இல் இருந்த ஒரு கீறல் வழியாக கசிந்த மழைநீரில் நனைந்து என் கட்டில் நாசமாக போனது.... கசிந்த நீருக்கு விழ வேறு இடமே கிடைக்கவில்லையோ.... அந்த மழைத்துளிகளும் என்னை போல் அந்த மஞ்சத்தில் ஓய்வெடுக்க ஆசைப்பட்டதோ.... யாம் அறியோம் பராபரனே.... ஆனால் இன்னும் அதே கட்டிலில் தான் நான் தூங்குகிறேன்.... என்று கட்டிலும் உடைந்து என் முதுகையும் உடைத்துக்கொள்ள போகிறேனோ....

அன்று என் நண்பர்கள் மழையை வெறுத்தார்கள் (இன்றைய நிலை தெரியவில்லை), நானும்.... அனால் அந்த அனுபவத்தில் ஒரு புதுமையும் இருந்தது.... வெறுப்பிலும் ஒரு சிறிய ஆனந்தம் இருந்தது, அந்த நனைதலில்....
அன்று ஆரம்பித்த மழை கடந்த இரண்டு நாட்கள் முன்பு வரை பிய்த்துக்கொண்டுதான் பெய்தது.... துணிகள் துவைத்துப்போட்டால் காயாது.... போதாதகுறைக்கு தினமும் உடுத்தும் உடைகள் சேரும் சகதியுமகத்தான் வீடு திரும்புகிறது....

நான் தலைக்கு எண்ணை போட்டு மூன்று நாள் ஆகின்றது.... ஆம் குளிரில் நான் உறைவது போலவே எண்ணையும் உறைந்துபோகிறது.... ஆனாலும் இந்த குளிரை நான் மிகவும் ரசிக்கிறேன்.... ஆனால் என்ன குளிருக்கு இதமாக நல்ல டீயோ காபியோ இங்கு இல்லை.... இந்த குளிரில் அதிக நேரம் தூங்க விரும்பும் எனக்கு Training என்ற பேரில் தூக்கத்துக்கும் சீக்கிரமாகவே முற்றுபுள்ளி....

கடந்த இரண்டு நாட்களாக மேகங்கள் சற்று இடம் விட சூரியன் மெல்ல தலை காட்டுகிறது.... இது இப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுகிறேன்.... அனால் இந்த மழை என்று தான் என் நம்பிக்கைப்படி நடந்துள்ளது.... மேலும் என்னுடன் விளையாடுவது தானே அதற்க்கும் பிடிக்கும்.... பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும் மழையின் மனதில் என்ன உள்ளதென்று....

இந்த வருடம் கேரளாவில் மழை குறைவாம்.... ஜூன் ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லையாம்.... எல்லாவற்றுக்கும் சேர்த்து அடுத்த மாதம் பயங்கரமாக மழை பெய்யும் என்பது அங்குள்ளவர்களின் எதிர்பார்ப்பு....

நான் அடுத்த மாதம் திருவனந்தபுரம் செல்கிறேன், ஓணம் பண்டிகைக்காக.... அதை எப்படியோ தெரிந்துகொண்ட இந்த பொல்லாத மழை கேரளாவிற்கு என்னை வரவேற்ப்பதர்க்காகவே இரண்டு மாதம் பெய்யாமல் காத்துக்கொண்டிருக்கிறது என்பது எனக்கு தானே தெரியும்....

2 comments:

JSTHEONE said...

yappa ivlo periya exp.... kalaku...seri onam festival appo kerala periya mazhai kaaththu kondu irukku sollu

க விக்னேஷ் said...

மூன்று அனுபவங்களையும் படித்து விட்டாயா இல்லை ஒன்றுக்கே இப்படி கூறியுள்ளாயா....

எப்படியானாலும்....நன்றி....