Saturday, October 18, 2008

சொல்லாமலே....


அவன் தன் அறைக்குள் அமர்ந்து Laptop Screen-ஐ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். இடையிடையே தன் கைக்கடிகாரத்தையும் பார்த்து மறுபடியும் பொறுமையின்றி Screen-க்கே தன் கவனத்தை திருப்பினான். மணி பத்தரை ஆக ஏன் இவ்வளவு நேரம் என்று நேரத்தையும் கடிந்துகொண்டிருந்தான். இதற்கிடையே அவன் தன் நினைவுகளையும் அசை போட்டுக்கொண்டிருந்தான்.

அவளை எப்படி சந்தித்தான், எப்படி அவர்கள் உறவு வளர்ந்தது, எல்லாவற்றையும் ஒரு மாதிரியான இன்பத்துடன் நினைத்துபார்த்துக்கொண்டிருந்தான். உண்மையை சொல்லப்போனால் அவர்கள் சந்தித்தே இல்லை. அவர்கள் இருவரும் Orkut 'Friends'. இவன் தான் ஏழேட்டு மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் Orkut-இல் இவளுக்கு Scrap செய்தான். தன்னுடன் கல்லூரியில் படித்த சந்தியா என்று நினைத்து தான் முதலில் பேச ஆரம்பித்தான். ஆனால் தான் வேறு சந்தியா என்றும், ஆனந்த் என்பவரை தனக்கு தெரியாது என்றும் அவள் பதில் அளித்தாள். அது அவ்வளவு தான் என்று தான் அவன் முதலில் நினைத்தான், ஆனால் பாட்டு, இளையராஜா, SPB இப்படி இருவருக்கும் இருந்த சில Common Interests அவர்கள் நட்ப்பை வளர்க்க உதவி செய்தது.

நட்பு வளர்ந்தது, எப்போதாவது Chat செய்தவர்கள் அடிக்கடி பேச ஆரம்பித்தார்கள், Orkut-இல் Testimonial எழுதினார்கள். நட்பு வலுத்தது, கைபேசி எண்கள் பரிமாறிக்கொண்டார்கள், கணக்கில்லாமல் SMS பரிமாற்றங்கள் நடந்தன. கைபேசியிலும் Chat-லும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசினார்கள். இப்படியே நட்பு முதிர்ந்து காதல் ஆனது. இது பார்க்காமலேயே, பேசி பேசி மட்டும் வந்த காதல். அதிசய காதல்...! அபூர்வ காதல்...!! இப்படி தன் காதலை நினைத்து ஆனந்த் மிகவும் பெருமைபட்டுக்கொள்வான்.

இப்படியே நினைவுகளில் ஆழ்ந்திருந்த ஆனந்த் நிகழ் காலத்துக்கு திரும்பி வந்தான். இன்று மதியம் பேசிய பொது இரவு சரியாக பத்தரை மணிக்கு வருவதாக கூறியிருந்தாளே, ஆனால் மணி இப்போது பதினொன்றை தாண்டி விட்டது இன்னும் அவள் Online வரவில்லையே என்று நினைத்து கொண்டிருந்த போதே அவள் வந்து விட்டாள். "Sorry Dear... Konjam Late aayittu... Im callin u..." என்று type செய்துவிட்டு அவனை Chat Messenger-இல் Call செய்தாள். என்னென்ன செய்தார்கள், எங்கெல்லாம் போனார்கள் என்ற பேச்சுக்களுடன் சில கொஞ்சல்கள், சின்ன சின்ன கோபங்கள் என்று நேரம் கடந்தது.

நேரம் பன்னிரெண்டை தாண்டியிருக்கும், ஆனந்துக்கு Chat வழியாக சில வெடி சத்தங்கள் கேட்டது. என்னவென்று கேட்டதற்கு சந்தியா "Boys Hostel-ல யாருக்கோ Birthday-ன்னு நெனைக்குறேன்... அது தான் பட்டாசு போட்டு கொண்டாடுறாங்க..." "சரி ஒரு நிமிஷம், நானும் போயி என்னன்னு பாத்துட்டு வரேன்..." என்று சொல்லிவிட்டு இவன் பதிலை எதிர்பார்க்காமல் அவள் எழுந்து சென்றுவிட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து அவள் திரும்பி வந்தாள், "Im Back..." என்ற message-ஓடு. மீண்டும் பேசி ஆரம்பிக்கவில்லை, அதற்க்கு முன் "Happy Birthday Happy______...ஹா ஹா ஹா... ஹீ ஹீ ஹீ..." "ஹ்ம்ம்... ஹ்ம்ம்... நடத்து நடத்து..." என்றெல்லாம் சில கூச்சல்களும் சிரிப்பொலிகளும் சந்தியாவின் அறையில் அரங்கேறியது ஆனந்துக்கு கேட்டது. அவர்கள் பேசியது அவனுக்கு சரியாக கேட்கவில்லை, ஆனால் அவர்கள் சந்தியாவை கிண்டல் செய்கிறார்கள் என்று மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது.

"என்ன ஆச்சு... உன்ன கிண்டல் பண்றாங்க போல... என்ன விஷயம்...?" என்று கேட்டான். என்றும் எதற்கும் நேரடியாக பதில் சொல்லி வந்தவள் "இல்ல... ஒண்ணும் இல்ல... சும்மா தான்..." என்று சமாளிக்க பார்த்தாள், கொஞ்சம் வெட்கத்துடன். உடனே தன்னையும் சந்தியாவையும் சேர்த்து தான் கிண்டல் செய்தார்கள் போலும் என்று எண்ணியவன் அவளிடம் மீண்டும் மீண்டும் கேட்டான், அவளும் கொஞ்ச நேரம் சமாளிக்க முயன்றாள், இனிமேல் முடியாது என்று புரிந்தவள் "சரி... சரி... சொல்லறேன்..." என்றாள். "ஹை... இன்று வரை நாங்கள் எங்கள் காதலை ஒருவருக்குள் ஒருவரே வைத்துக்கொண்டிருந்தோம்... இன்று அவள் இதை பற்றி சொன்ன உடனே... ஆமா உண்மை தானே என்று கூறி propose செய்வதை simple அக முடித்து விடலாம்..." என்று எண்ணினான்.

"நான் ரொம்ப நாளா சொல்லணும்-ணு தான் நெனச்சுட்டு இருக்கேன்... ஆனா என்னமோ ஒரு சின்ன தயக்கம்..." என்று அவள் ஆரம்பிக்க ஆனந்துக்கு மனசெல்லாம் ஒரே சந்தோஷம். "இண்ணைக்கு Boys Hostel-ல ஒருத்தனுக்கு Birthday-ணு சொன்னேன்-ல..." என்று அவள் கூறியதும், அவனுக்கு தூக்கி வாரி போட்டது, "என்னடா நடக்குது" என்று குழம்பினான். அவள் தொடர்ந்தாள் "... அவன்.. கௌதம்... என்னோட... ஹ்ம்ம்... என்னோட Boy-Friend..." என்று அவள் சொல்லி முடிக்க, அவனுக்கு தான் இருந்த நாற்காலி உடைந்து, அவன் தரையில் விழுந்து, அப்படியே பூமியை பிளந்து ஒரு படுகுழியில் விழுவதுபோல் உணர்ந்தான். இப்போது நடந்து முடிந்தது ஒரு கனவாக இருக்க கூடாதா என்று அவன் எண்ணினான். "அவன் இன்னக்கே எனக்கு Treat குடுத்துட்டான்... அதான் நான் இன்னக்கு வர கொஞ்சம் Late ஆச்சு..." என்று ஆரம்பித்து அவள் என்னென்னமோ சொல்லிக்கொண்டே போனாள். அவன் அதை கவனித்ததாக தெரியவில்லை.

அவனுக்கு அழுகை அழுகையாய் வந்தது. நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது. தான் கட்டியதெல்லாம் வெறும் மனக்கோட்டை தானா ? அவளுக்கு உண்மையிலேயே என் மேல் காதல் இல்லையா ?? நான் தான் நடப்பை காதல் என்று எண்ணிய மூடனா ??? ஒரு வேளை அவள் சும்மா விளையாடுகிராளோ ???? இப்படி கேள்விகள் எழ அவனுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விடும்போல் இருந்தது, ஆனால் "Hello... Hello... இருக்கியா டா...?" என்ற அவள் குரல் அவனை மீண்டும் சுயநினைவுக்கு திருப்பியது. அவனும் பதில் சொன்னான், எதையோ இழந்தவன் போல் "ஹ்ம்ம்... இருக்கேன்" "... ஆமா... எத்தன நாளா...?" என்று அவன் தொடர "என்ன... ஒஹ்... அதுவா... அதான் ரெண்டு வர்ஷமா-ன்னு சொன்னேன்-ல... ஏன்... என்ன ஆச்சு...?" என்றாள். "இல்ல... கவனிக்கல... ஒண்ணும் இல்ல... சும்மா தெரிஞ்சிக்கலாம்-ணு தான் கேட்டேன்..." என்று சமாளித்தான்.

தன் காதல் சொல்வதற்கு முன்பே முடிந்து போன வேதனை... அது அதிசய காதலோ அற்புத காதலோ அல்ல, வெறும் கற்பனை காதல் தான் என்பதை உணர்ந்த ஏமாற்றம்... தன்னை பார்ப்பதற்கு முன்னாலே அவள் வேறொருவனின் காதலி என்ற உண்மை அவனுக்கு அளித்த சிறிய ஆறுதல்... ஒரு வேளை என்னை முதலில் பார்த்திருந்தால்... என்று தன்னை தானே தேற்றிக்கொள்ள உருவான எண்ணம்...

இந்த எண்ணபெருக்குகளின் நடுவில் அவள் கேள்விகளுக்கு என்னன்னெமோ பதில் சொன்னவனின் கைவிரல்கள் Laptop Keyboard-இல் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்தன. அவன் 5600 Members இருந்த 'First Love' Community-இல் இருந்து Unjoin செய்து விட்டு 24000 Members உள்ள 'I Cannot Forget My First Love' Community-இல் Join செய்ய Request அனுப்பினான். அவன் Request அடுத்த கணமே ஏற்றுக்கொள்ளப்பட்டது... "... no matter how much pain it has caused, no matter how many tears have fallen, first love will never leave my soul... (... எத்தனை வலி தந்திருந்தாலும், எவ்வளவு கண்ணீர் சிந்தியிருந்தாலும், முதல் காதல் என்றும் என் நெஞ்சை விட்டு நீங்காது...)" என்று அந்த Community அவனை வரவேற்றது...

Tuesday, October 7, 2008

உறவா...? உணர்வா...??


நட்பு உண்மையானதென்றால்,
காதல் தெய்வீகமானது...

வற்றாத கேணி தான் நட்பென்றால்,
நாளை பெய்ய போகும் மழை காதல்...

நட்பில் எதிர்பார்ப்புகள் இல்லையென்றால்,
காதலில் புரிதலும், விட்டு கொடுத்தலும் உண்டு...

தோல்விக்கு அப்பாற்பட்டது நட்பென்றால்,
தோல்வியிலும் வெற்றி காண்பது காதல்...

நான் அவளிடம் கொண்டது இதில் எது - நட்பா...? காதலா...??

இல்லை, எங்கள் உறவு இந்த இரண்டு;
மூன்றெழுத்து வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டதா...???

ஆம்...!!!
இது காதல் இல்லாத நட்பு...;
காமம் இல்லாத காதல்...;

இந்த புனிதமான சங்கமத்தில் பிறந்த அமரமான உறவு;
பேர் சொல்ல முடியாத ஒரு தூய உணர்வு...!!!