Monday, January 19, 2009

நிழலும் நிஜமும்...தொடர்கிறது...


நிழலும் நிஜமும் கதையை படிச்சுட்டு இதை படிங்க...அப்பத்தான் முழுசா புரியும்... :)

தனது Audi SUV-இல் Airport-க்குள் நுழைந்தார் விக்ராந்த். அவரது Car-ஐ பின்தொடர்ந்தே ஒரு Innova-வும் வந்துகொண்டிருந்தது. அங்கு என்றுமே இல்லாத அளவுக்கு Police இருப்பதை கவனித்தார். "VIP யாரவது வர்றாங்களா, இல்ல நமக்கு தான் இவ்வளவு Protection Arrange பண்ணி இருக்காங்களா...." என்று யோசித்துக்கொண்டே Parking-ஐ நோக்கி சென்றார் விக்ராந்த்.

அப்போது ஒரு Police Inspector அவர் Car-ஐ மரித்தார், இன்னொருவர் Driver Seat ஜன்னலை தட்டினார். விக்ராந்த் ஜன்னலை திறந்ததும் Inspector "Sir...ஒரு சின்ன Enquiry....எங்க கிட்ட Warrant இருக்கு...ஆனா உங்கள இங்க வச்சு Arrest பண்ணா Public Reaction Violent-ஆ இருக்கும்-நு நேனைக்குறோம்....So நீங்க தயவு செய்து Co-operate பண்ணி எங்க கூட Station வரைக்கும் வந்தா நல்லா இருக்கும்...." என்று சொன்னார்.

Tension ஆனார் விக்ராந்த், AC Car-இலும் அவருக்கு வியர்த்தது, "யாருய்யா உனக்கு Warrant கொடுத்தது...Home Minister கிட்ட பேசுறியா....யாருகிட்ட பேசுறன்னு தெரியாம....Warrant-ஆம் Warrant....என்ன விளையாடுறியா...." என்று பொரிந்து தள்ளினார். அதற்க்கு பொறுமையுடன் பதில் சொன்னார் Inspector, "Centre-ல இருந்து Order Sir....Anti-Terrorist Squad, CBI-நு எல்லா Department-ல இருந்தும் தனி தனி Warrants இருக்கு....So Please Co-operate, else, we will have to take you forcefully....".

பின்னால் வந்த Innova-வை Police ஏற்க்கனவே சூழ்ந்துவிட்டதை தனது rear-view mirror-இல் பார்த்தார், இனி எதிர்த்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று உணர்ந்த விக்ராந்தும் பணிந்தார். "சரி Sir....நீங்க முன்னாலே போங்க...I will Follow you...." என்றார். "No Sir...நாங்களும் உங்களோட வருவோம்...We will Drive the car...." "ஹ்ம்ம்...Ok...your wish..." என்று ஒதுங்கினார் விக்ராந்த். சுற்றிலும் Police வண்டிகள் சூழ Heavy Protection-உடன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் விக்ராந்த்.

அங்கு அரங்கேறிய அந்த காட்சிகளை அனைவரும் இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நடப்பது உண்மை தானா இல்லை Shooting Rehearsal-ஆ என்று எண்ணி வியந்தார்கள். சிலர் எங்காவது Camera ஓடுகிறதா என்றும் பார்த்தார்கள். ஆனால் கூட்டத்தில் ஒருவருக்கு மட்டும் அந்த காட்சிகளை பார்த்து பெரிய ஆச்சரியம் ஒன்றும் தோணவில்லை. காரணம் காவல்துறைக்கு இந்த தகவலை தெரிவித்ததே அவர் தான்.

மதியம் தொலைகாட்சி செய்திகளில் நிறைந்திருந்தார் "தேசப்பற்று நாயகன்".

"தேசப்பற்று நாயகன் நடிகர் விக்ராந்த் கைது"

விமான நிலையத்தில் தீவிரவாதிகள் என்று சந்தேகபடப்படும் இரண்டு நபர்களுடன் நடிகர் விக்ராந்த் கைது...பாய் என்று அழைக்கப்படும் பன்னாட்டு தீவிரவாதி அஸ்லம் கானுடன் இவருக்கு தொடர்புள்ளதாய் தகவல்கள் வெளிவந்துள்ளன...அவர் வீட்டில் இருந்து 10 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாய் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...இந்த விஷயத்தை பற்றி Police வட்டாரங்கள் மௌனம் சாதிக்கின்றன...விக்ராந்த் கைது செய்யப்பட விவரம் அறிந்து ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள்... சென்னையில் Commissioner Office முன்னிலையிலும், DGP Office முன்னிலையிலும் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்...விவரம் அறிந்து தமிழ் திரை உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது...இதை பற்றி பேசுகையில், நடிகர் சங்க தலைவர், தான் உடனே விக்ராந்தை சந்தித்து பேசி, அவர் நிரபராதி ஆயிருக்கும் பட்சத்தில், அவருக்கு திரை உலகின் முழு ஆதரவும் தெரிவிக்கப்படும் என்றார்...."

இதேநேரம் தமிழ்நாடு DGP ஒரு Press Conference அழைத்தார். அதில் அவர் கூறியது, "நேத்து Night ஏழு மணி பக்கத்துல எங்களுக்கு ஒரு Call வந்தது, அதுல, இந்த மாதிரி நடிகர் விக்ராந்த் தீவிரவாதி பாய் கூட Airport-ல Terror Attack பண்ணறது பற்றி பேசினார், அதுக்கு என் கிட்ட Evidence இருக்கு-நு சொன்னார். அத உடனே அவர் எங்ககிட்ட Present-உம் பண்ணார். நாங்களும் உடனே விக்ராந்த் Sir-க்கு Call பண்ணி, மறுநாள் Airport-ல Security-க்கு தேவை-ங்கற பேருல சில Details Collect பண்ணோம்...அதுல பல விஷயங்கள் Match ஆச்சு...அதுல ஒண்ணு தான் Makeup man-ங்கற பேருல வந்த ரெண்டு தீவிரவாதிகள்..."

சாயங்காலம் மணி ஐந்தை தாண்டியிருக்கும், ரகுராம் தன் வீட்டில் விக்ராந்தின் ரசிகனான தன் பதினைந்து வயது மகனுடன் Chess ஆடிக்கொண்டிருந்தார். ஒரு பக்கம் Chess ஆடிக்கொண்டிருந்தாலும் அவர் கண் தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்திகளில் தான் அதிகம் கவனம் செலுத்தியது. செய்திகளில் இப்பொழுதும் விக்ராந்த் நிறைந்திருந்தார். தந்தையின் கவனம் Chess-இல் உள்ளதை விட தொலைகாட்சியில் உள்ளதை பார்த்த மகன் ஆட்டத்தில் ஏமாற்றிவிட்டான்.

"Check...!!!" என்றான். "ஹ்ம்ம் என்ன..." என்றதற்கு "Check-ப்பா..." என்றான். கொஞ்சம் Board-ஐ கவனித்துப்பார்த்தவுடன் மகன் ஏமாற்றியதை ரகு புரிந்துகொண்டார்.

மகன் விளையாட்டில் ஏமாற்றியதை பார்த்த ரகுவுக்கு முந்தய நாள் சாயங்காலம் நடந்த அந்த சம்பவம் கண் முன் ஒரு மின்னல் போல் மின்னி சென்றது. அந்த சம்பவம் என்னவென்றால்...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மணி ஆறரையை தாண்டியிருக்கும், ரகு தன் கைபேசியில் இருந்து விக்ராந்தின் கைபேசிக்கு அழைத்தார். Ring போகாமல் நேரடியாக Line Connect ஆனது.

"Hello..." என்று சொல்வதற்கு முன் அவருக்கு தொண்டை அடைத்தது...சொற்கள் அவர் வாயில் இருந்து வெளி வரவில்லை, காரணம் விக்ராந் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சு ஒரு Cross-talk ஆக அவருக்கு கேட்டது என்பதை விட அவர்கள் பேசிய விஷயம் தான் அவருக்கு நாவரள செய்தது.

"...ரெண்டு பேர அனுப்பி வைங்க...நம்ம Airport Operation-க்கு Detailed-ஆ Plan பண்ண Airport-அ நல்ல படிக்கணும்-நு சொன்னீங்கல்ல..." என்று பேசிய விக்ராந்தின் குரல் அவருக்கு தலை சுற்றலை தந்தது. ஆனால் அடுத்த நொடி சுதாரித்தவர், அந்த உரையாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தனது கைபேசியில் அந்த பேச்சை பதிவு (Record) செய்ய ஆரம்பித்தார். அவர் பதிவு செய்த உரையாடல் இப்படி தொடர்ந்தது.

"...பசங்கள அனுப்பினீங்கண்ணா, Personal Makeup man, Hair Designer-நு ஏதாவது சொல்லி என்கூடையே வச்சிக்குறேன்....அந்த லூசுப்பய Director, Airport full-ஆ Shoot பண்ண Permission வாங்கியிருக்கான்....நம்ம வேல simple-ஆ முடிச்சுரலாம்....Easy-யா ஒரு Detailed Map-ஏ போட்டுறலாம்...."

"அப்படியா !! வாஹ் வாஹ் !!! நல்ல சேதி தம்பி...கடவுள் அருள்-ல எல்லாம் நல்லபடியா நடக்கும்...நான் ரெண்டு பேர நாளைக்கு உன் வீட்டுக்கு அனுப்பி வைக்குறேன்..." என்று அமைதியான ஒரு உற்சாகத்துடன் அந்த நபர் பேசினார்.

"ஆங்...அப்புறம் பாய்...அந்த Pakistan பசங்கள அனுப்பீராதீங்க...தமிழ் பேச தெரிஞ்சவங்களா, நம்ம ஊரு பசங்கள மாதிரி உள்ள ரெண்டு பேர பாத்து அனுப்புங்க...அப்படியே அவங்க கிட்ட ஆளுக்கு ரெண்டு "பெரிய" Suitcase-உம் கொடுத்து அனுப்பி வச்சிருங்க பாய்..."

"ஹா...ஹா...ஹா...எனக்கு தெரியும் தம்பி...நீ கவலைப்படாத...நம்ம பசங்க தான் வருவாங்க...அப்புறம் பணம்...நாளைக்கு ரெண்டு பெரிய பெட்டி வரும்...வேல முடிஞ்சா இன்னும் ரெண்டு வரும்...என்ன சந்தோஷமா..."

"Thanks பாய்...சலாம் பாய்..."

"சலாம் சலாம்..." என்று சொல்லி அந்த உரையாடல் முடிந்தது.

மூச்சு கூட விடாமல் அந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ரகுவுக்கு வியர்த்துக்கொட்டியது. விக்ராந்த் இப்படி ஒரு துரோகியா என்ற வியப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு பெரிய ஆபத்தை தன்னால் தவிர்க்க முடியும் என்று உணர்ந்து உடனே 100-க்கு அழைத்து, ஒரு மிக முக்கியமான, ரகசியமான தகவல் உண்டு என்றும், தான் இன்னார் என்றும், தான் DGP உடன் உடனே பேசியாகவேண்டும் என்று கூறினார். DGP-இடம் அனைத்து விவரங்களையும் கூறிய அவர், அந்த உரையாடலின் Recording-ஐயும் அவருக்கு கொடுத்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"என்னப்பா யோசிக்குறீங்க...?? விக்ராந்த் Arrest ஆனதுனால நம்ம முதல் படத்துக்கே Check வச்சுட்டாங்க...இப்ப நம்ம மகனும் நமக்கு Check வச்சுட்டானே-நு பாக்குறீங்களா...விடுங்கப்பா அவரு நல்லவரு...கண்டிப்பா திரும்பி வருவாரு...நீங்க கண்டிப்பா அந்த படத்த Direct பண்ணி முடிப்பீங்க...வேண்ணா நீங்களே பாருங்க..."

விக்ராந்திடம் அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு அணிந்து வர வேண்டிய உடைகளை பற்றி கூற கூப்பிட்ட தனக்கு Cross-talk மூலம் விக்ராந்தின் தேசத்ரோகம் என்ற அதிர்ச்சி கிடைத்தது, இன்று மகனின் ஏமாற்று-ஆட்டம் அவருக்கு மேலும் வேதனையை தந்தது. இருப்பினும் அவர் நேற்றை போலவே இன்றும் பொறுமை காத்தார்.

"அப்பா...Check...!!!", நிகழ்காலத்துக்கு திரும்பினார் ரகு.

ஏமாற்றி வெள்ளை ராஜாவுக்கு Check வைக்க முயன்ற மகன் தனது ராஜாவை பற்றி யோசிக்கவில்லை என்பதை ரகு கவனித்தார். அடுத்த Move-இல் "Check-mate...!!!" என்றார். தோல்வியை ஒப்புக்கொண்ட மகனுக்குள் குற்றவுணர்ச்சி பெருக்கெடுத்ததை புரிந்துகொண்ட ரகு "தம்பி...தப்பு பண்ணுறது சகஜம்...பரவாயில்ல...ஆனா அதையே Repeat பண்ணக்கூடாது...அதை மட்டும் மனசுல வச்சுக்கோ..." "...அப்புறம்... எண்ணைக்குமே தப்பான வழியில ஜெயிச்சுரலாம்-நு நெனைக்க கூடாது...அது ரொம்ப தற்காலிகமானது...நீ இப்ப எனக்கு Check வச்ச மாதிரி...எண்ணைக்குமே முடிவுல உண்மை தான் ஜெயிக்கும்..."

தான் தன் Hero விக்ராந்திடம் சொல்ல நினைத்து முடியாமல் போனதை தன் மகனுக்கு சொல்லி அவனுக்கு நல்வழி காட்டியதில் ஆனந்தம் கலந்த ஒரு திருப்தி கண்டார்...!!!