Monday, November 23, 2009

கை-கடிகாரம்

நொடி ஒவ்வொன்றிலும்;
உன் கரம் பிடித்து நடந்திட ஏங்கினேன்...
ஏங்கி...துடித்து;
இன்று வழியும் கண்டுவிட்டேன்...

இன்று நான் கையால்;
கட்டி விடும் இக்கடிகாரம்...
என் கையாய்;
உன் கரம் பற்றி கொள்ளட்டும்...

Wednesday, November 4, 2009

என்னுயிரே...

நீ இருக்கும் திசையினை மட்டும்;
என் உள்ளம் இன்று உணர்கிறது...

வடக்கையே தேடும் காந்தம் போல்;
என் கண்கள் உன்னையே தேடுகிறது...

உன் காலடியின் சிறு ஓசைகளை;
என் செவிகள் நிச்சயம் அறிகிறது...

கரும் கூந்தல்வாழ் மல்லிகை வாசம்;
என் நாசி வழி இதையத்தையும் துளைக்கிறது...

ஏனெனில், காற்றில் கலந்த வார்த்தை போல்;
நேற்று, நீ எங்கோ தொலைந்து விட்டாய்...

ஆனால், கடலில் விழுந்த மழைத்துளி போல்;
அக்கணமே, என்னுள்ளே நீ கலந்து விட்டாய்...
என் உயிரிலேயே இணைந்து விட்டாய்...
என் உயிராகவே மாறி விட்டாய்...

Monday, November 2, 2009

கோப அலைகள்...

அலைகள் இல்லையேல்;
கடலுக்கு ஏது அழகு...
அதே போல் தான் எனக்கு;
உன் செல்ல கோபங்களும்...

அதை ரசிக்கின்றேன்;
கடலில் நீந்தும் ஒரு சிறுவன் போல்...
அது சுனாமியாய் உருமாறியெனை;
மூழ்கடித்திடாத வரை...