நீ இருக்கும் திசையினை மட்டும்;
என் உள்ளம் இன்று உணர்கிறது...
வடக்கையே தேடும் காந்தம் போல்;
என் கண்கள் உன்னையே தேடுகிறது...
உன் காலடியின் சிறு ஓசைகளை;
என் செவிகள் நிச்சயம் அறிகிறது...
கரும் கூந்தல்வாழ் மல்லிகை வாசம்;
என் நாசி வழி இதையத்தையும் துளைக்கிறது...
ஏனெனில், காற்றில் கலந்த வார்த்தை போல்;
நேற்று, நீ எங்கோ தொலைந்து விட்டாய்...
ஆனால், கடலில் விழுந்த மழைத்துளி போல்;
அக்கணமே, என்னுள்ளே நீ கலந்து விட்டாய்...
என் உயிரிலேயே இணைந்து விட்டாய்...
என் உயிராகவே மாறி விட்டாய்...