Sunday, February 14, 2010

காதல் மறவேல்...

தூரத்தால் பிரிந்திருக்கும் இரு உடல்கள்...
எனதிருந்தும் இணைந்திருக்கும் உயிர்கள்...
இதுவல்லவோ நம் உறவு...

காலத்தால் பிரிக்கப்பட்ட கரங்கள்...
காதலினால் இணைக்கப்பட்ட மனங்கள்...
இது தானே நம் நிலைமை...

கால-நேரம் மறந்து பேசியிருந்தோம் அன்று...
குரல் கூட கேட்க முடியா நிலை இன்று...
கணநேரம் பேச முடிவது இனி என்று??

ஏக்கங்களும் தவிப்புகளும் இங்கிருக்க...
காலத்தின் கட்டளையால் நாம் தனித்திருக்க...
உன்னை மறக்கச்சொல்லி சிலர் பரிந்துரைக்க....

செய்வதறியாது நான் கலங்கினாலும்...
செயலிழந்து நான் மயங்கினாலும்...
என் வார்த்தை என்றும் ஒன்றே தான்...

“என்னை நானே மறந்தாலும் கூட;
உன்னை மறப்பதென்பது அசாத்தியம்...
இவ்வுலகமே திரண்டெதிர்த்தாலும் கூட;
நம்மை பிரிப்பது இல்லை சாத்தியம்...
என் தாய் மீது சத்தியம்!!!”

உன்னை மறந்தால்…

உன்னை மறந்தால் நான் மனிதனில்லை;
வெறும் மிருகம், என்பதை அறிவேன்...

இன்னொன்றும் அறிகிறேன் அன்பே...
நான் வேட்டையாடும் முதல் உயிர் நீ என்று!!!