Sunday, April 11, 2010

போதும் என்ற மனமே...

என் மனதை சொல்லியுரைக்க;
வார்த்தைகள் அனைத்தும் போதவில்லை...

என் காதலை காட்டி மகிழ;
யுகங்கள் பல பற்றவில்லை...

உன் உயிர் வரை பருகியருந்த;
சிறு இரவின் நீளம் காணவில்லை...

உன்னுடன் வாழ்ந்தனுபவிக்க;
இந்த ஜன்மம் ஒன்று போதவில்லை...

போதும் என்ற மனம் இங்கெனக்கு;
பொன் செய்யவில்லையே...

காதலில் போதும் என்றாலது...
புண் செய்யும் மருந்தே...

Sunday, February 14, 2010

காதல் மறவேல்...

தூரத்தால் பிரிந்திருக்கும் இரு உடல்கள்...
எனதிருந்தும் இணைந்திருக்கும் உயிர்கள்...
இதுவல்லவோ நம் உறவு...

காலத்தால் பிரிக்கப்பட்ட கரங்கள்...
காதலினால் இணைக்கப்பட்ட மனங்கள்...
இது தானே நம் நிலைமை...

கால-நேரம் மறந்து பேசியிருந்தோம் அன்று...
குரல் கூட கேட்க முடியா நிலை இன்று...
கணநேரம் பேச முடிவது இனி என்று??

ஏக்கங்களும் தவிப்புகளும் இங்கிருக்க...
காலத்தின் கட்டளையால் நாம் தனித்திருக்க...
உன்னை மறக்கச்சொல்லி சிலர் பரிந்துரைக்க....

செய்வதறியாது நான் கலங்கினாலும்...
செயலிழந்து நான் மயங்கினாலும்...
என் வார்த்தை என்றும் ஒன்றே தான்...

“என்னை நானே மறந்தாலும் கூட;
உன்னை மறப்பதென்பது அசாத்தியம்...
இவ்வுலகமே திரண்டெதிர்த்தாலும் கூட;
நம்மை பிரிப்பது இல்லை சாத்தியம்...
என் தாய் மீது சத்தியம்!!!”

உன்னை மறந்தால்…

உன்னை மறந்தால் நான் மனிதனில்லை;
வெறும் மிருகம், என்பதை அறிவேன்...

இன்னொன்றும் அறிகிறேன் அன்பே...
நான் வேட்டையாடும் முதல் உயிர் நீ என்று!!!

Monday, November 23, 2009

கை-கடிகாரம்

நொடி ஒவ்வொன்றிலும்;
உன் கரம் பிடித்து நடந்திட ஏங்கினேன்...
ஏங்கி...துடித்து;
இன்று வழியும் கண்டுவிட்டேன்...

இன்று நான் கையால்;
கட்டி விடும் இக்கடிகாரம்...
என் கையாய்;
உன் கரம் பற்றி கொள்ளட்டும்...

Wednesday, November 4, 2009

என்னுயிரே...

நீ இருக்கும் திசையினை மட்டும்;
என் உள்ளம் இன்று உணர்கிறது...

வடக்கையே தேடும் காந்தம் போல்;
என் கண்கள் உன்னையே தேடுகிறது...

உன் காலடியின் சிறு ஓசைகளை;
என் செவிகள் நிச்சயம் அறிகிறது...

கரும் கூந்தல்வாழ் மல்லிகை வாசம்;
என் நாசி வழி இதையத்தையும் துளைக்கிறது...

ஏனெனில், காற்றில் கலந்த வார்த்தை போல்;
நேற்று, நீ எங்கோ தொலைந்து விட்டாய்...

ஆனால், கடலில் விழுந்த மழைத்துளி போல்;
அக்கணமே, என்னுள்ளே நீ கலந்து விட்டாய்...
என் உயிரிலேயே இணைந்து விட்டாய்...
என் உயிராகவே மாறி விட்டாய்...

Monday, November 2, 2009

கோப அலைகள்...

அலைகள் இல்லையேல்;
கடலுக்கு ஏது அழகு...
அதே போல் தான் எனக்கு;
உன் செல்ல கோபங்களும்...

அதை ரசிக்கின்றேன்;
கடலில் நீந்தும் ஒரு சிறுவன் போல்...
அது சுனாமியாய் உருமாறியெனை;
மூழ்கடித்திடாத வரை...

Friday, October 16, 2009

தீபத்திருநாள்...

ஏற்றிய அழகு தீபங்களில்;
தீயவை யாவும் கருகட்டும்!!
வானை தைக்கும் வாணம்போல்;
உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கட்டும்!!!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...