Sunday, April 11, 2010

போதும் என்ற மனமே...

என் மனதை சொல்லியுரைக்க;
வார்த்தைகள் அனைத்தும் போதவில்லை...

என் காதலை காட்டி மகிழ;
யுகங்கள் பல பற்றவில்லை...

உன் உயிர் வரை பருகியருந்த;
சிறு இரவின் நீளம் காணவில்லை...

உன்னுடன் வாழ்ந்தனுபவிக்க;
இந்த ஜன்மம் ஒன்று போதவில்லை...

போதும் என்ற மனம் இங்கெனக்கு;
பொன் செய்யவில்லையே...

காதலில் போதும் என்றாலது...
புண் செய்யும் மருந்தே...