Tuesday, August 12, 2008

மழையும் நானும்....

கேரளாவில் வளர்ந்த எனக்கு மழை ஒன்றும் புதிய விஷயம் அல்ல.... ஜூன் மாதம் ஒன்றாம் தேதி (முதல் வாரம் என்று எடுத்துக்கொள்ளுங்கள்) பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் பொழுது எங்குமே புதிய சீருடைகள், ஷூக்கள், புத்தகங்கள் வாங்குவது வழக்கம்.... ஆனால் கேரளாவில் இவையுடன் புதிய குடை வாங்குவதும் வழக்கம்.... ஜூன் மாதம் துவங்கும் மழை கேரளத்தில் மிக பிரசித்தம்....

நான் அப்படி கூறும் பொழுது ஜூனில் மட்டும் தான் அங்கு மழை பெய்ய்மோ என்று நீங்கள் எண்ண வேண்டாம்.... வருடத்தில் எட்டு முதல் பத்து மாதம் வரை அங்கு மழை பெய்யும்.... ஆனால் கோடை மாதங்களுக்கு பிறகு பெய்யும் அந்த ஜூன் மாத மழை புதிய வருடத்தை துவங்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு தனி குதூகலத்தை கொடுக்கும்....

அப்படி மக்களுக்கு தொல்லை தராத.... சில நேரம் மட்டும் பலமாகவும், மிச்ச நேரம் இதமாகவும் பெய்யும் இந்த மழையுடன் எனக்கு உண்டான சில அனுபவங்கள் தான் தொடரும் எழுத்துகளில் நான் பகிர்ந்துகொள்கிறேன்....

No comments: