Tuesday, August 12, 2008

கேரளாவிலும் என்னை வரவேற்ற மழை....

மழையும் நானும்.... & என்னை வரவேற்க வந்த மழை.... வாசித்துவிட்டு இதை வாசிக்கவும்... நன்றி...

ஹைதராபதிற்கு வந்த பிறகு நான் மூன்று முறை திருவனந்தபுரம் சென்றுள்ளேன்.... முதல் இரண்டு முறையும் என்னை மறந்த மழை (நானும் மழையை மறந்து விட்டேன்), மூன்றாவது முறை வட்டியும் முதலுமாக கணக்கை முடித்துவிட்டது.... 'என்னை மறந்ததேன்...' என்று நான் மழையை கேட்கவில்லை, அனால் மழை என்னிடம் அப்படி கேட்க விரும்பியதோ என்னமோ, மழையை மறந்ததற்கு எனக்கு நல்ல தண்டனையையும் தந்தது....

ஜூன் மாதம், ஹைதராபாத்தில் வெயில் மனிதனை பகலில் பொரித்தெடுத்தது.... ரயிலில் வந்த போது நான் அதை நன்றாக அனுபவித்தேன்.... அப்போது மழை பெய்யக்கூடாதா என்று நான் எதிர்பார்த்து உண்மை தான்.... அப்போது சற்று மழை பெய்யவும் செய்தது.... அதற்க்கு நான் வருணதேவனுக்கு நன்றியும் தெரிவித்தேன்.... ஆனால் நன்றி சற்று கூடுதலாக சொல்லிவிட்டேன் என்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்த பிறகு தான் புரிந்தது....

கொல்லம் வருவது வரை மழைக்கான ஒரு அறிகுறியும் தெரியவில்லை.... அனால் கொச்சுவேளி (திருவனந்தபுரத்திற்கு முந்தய நிறுத்தம்) வந்த போது கார்மேகம் வானத்தை ஆக்கிரமித்திருந்தது.... மழை ஆரம்பிப்பதற்கு முன்னதாக வீடுபோய் சேர வேண்டுமென்ற என் ஆசையை வருணபகவான் இம்முறை கேட்க்கவில்லை.... ரயில் நிலையத்தில் நான் கால் வைப்பதற்கு சில நோடிகள் மட்டும் இருக்கவே மழை வானத்தை பிய்த்துக்கொண்டு பெய்ய ஆரம்பித்தது....

நனைந்துகொண்டே என் ராட்ஷச பெட்டியை உந்தியும் தூக்கியும் எப்படியோ ரயில் நிலைய வாசல் வந்துவிட்டு தந்தையை தொலைபேசியில் அழைத்தேன்....அழைத்து இப்படி பேசினேன்....

நான்: "அப்பா....இங்க ரொம்ப மழை பெய்யுது....நீங்க வர வேண்டாம்....நான் ஆட்டோ பிடிச்சு வந்திருதேன்...."

அப்பா: "ஆஹா....நீ வந்துட்டியா....மழை எங்க....இங்க மழையே இல்லையே"

நான் என் விதியை நொந்துகொண்டே தொடர்ந்து பேசினேன்....

நான்: "அப்படியா....ஆனா இங்க நல்ல மழை....பரவாயில்ல....நான் வந்திருவேன்....நீங்க வீட்ல இருங்க...."

பேசிக்கொண்டிருந்தபோதே என் கைபேசியின் உயிர் தோய்ந்துகொண்டிருப்பதையும் நான் கவனிக்க மறக்கவில்லை.... அப்படியே நான் மழையில் நனைந்து கொண்டே ஆட்டோ ஏறுவதற்காக Pre-paid Counter முன் நின்று கொண்டிருந்தேன்.... நானும் நின்றுகொண்டுதான் இருக்கிறேன் வரிசை முன்னாள் நகழவே மறுத்தது.... விசாரித்ததில் ஆட்டோவுக்கே தட்டுபாடு என்று தெரிந்துகொண்டேன்.... அதற்கிடையில் மழை சற்று ஓய்ந்தது.... உடனே நான் தந்தையை கைபேசியில் அழைத்து இப்படி பேசினேன்....

நான்: "அப்பா....இங்க ஆட்டோவே இல்ல....மழையும் நிண்ணுருச்சு....நீங்க உடனே கிளம்பி வாங்க....நான் wait பண்ணறேன்...."

அப்பா: "சரிடா....நான் பத்தே நிமிஷத்துல வந்துருதேன்...."

அதற்கிடையில் என் கைபேசி தன் கடைசி நொடிகளில் வாழ்ந்துகொண்டிருந்தது.... பத்து நிமிடம் தாண்டி கைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.... அப்பாவின் கைபேசி எண்ணிலிருந்து தான் அழைப்பு.... அவர் வந்துவிட்டார் என்ற ஆனந்தத்தில் நான் பேச ஆரம்பித்தபோது என் கைபேசி செத்தது....

சரி பேசாவிட்டால் என்ன.... வெளியே போய் தேடிப்பார்த்தால் தெரியும் எங்குள்ளார் என்று.... இந்த எண்ணத்தில் நானும் தேடிப்பார்த்தேன்.... இல்லை.... அப்பா அங்கு எங்கும் இல்லை.... விதியின் வேடிக்கையை எண்ணி வியந்து கொண்டு நான் ரயில் நிலையத்தில் உள்ள போது தொலைபேசியிலிருந்து அப்பாவின் கைபேசியை அழைத்தேன்.... 'முடியல....' 'Number Busy' என்று கூறி என் உயிரை எடுத்தது.... முப்பது மணிநேரம் ரயிலில் சிலவு செய்தபோது தோணாத அலுப்பு அந்த முக்கால் மணிநேரத்தில் எனக்கு தோணியது.... எப்படியோ அப்பாவின் கைபெசியுடன் தொடர்பு கிடைத்தது.... அவரிடம் இருந்து வந்த பதில், மழை ஏன் என்னுடன் இப்படி விளையாடுகிறது என்று என்னை எண்ணச்செய்தது.... ஆம், "இப்ப எங்க இருக்குரீங்கப்பா...." என்ற என் கேள்விக்கு அப்பா சொன்ன பதில் "வீட்ல இருந்து கெளம்பின ரெண்டாவுது நிமிஷம் மழை பயங்கரமா விழ ஆரம்பிச்சுருச்சு....அதான் கொஞ்சம் ஒதுங்கி நிக்குறேன்....மழை கொஞ்சம் விட்டுருக்கு....இன்னும் பத்து நிமிஷத்துல நான் வந்துருவேன்...."

ரயில் நிலையத்திற்கு வெளியே வந்தால் இப்பொழுது ஆட்டோவுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை, மழைக்கும்.... இன்னொருமுறை risk எடுக்க விரும்பாததால் மழையானாலும் என்னவானாலும் அப்பாவுடனே வீட்டிற்கு போவது என்று காத்திருந்தேன்.... அப்பாவும் வந்தார்.... நன்றாக நனைந்திருந்தார்.... நானும் மழையை பொருட்படுத்தாமல் அப்பாவுடன் scooter இல் ஏறி கிளம்பினேன்....

இப்படி மழையில் ஆரம்பித்த அந்த விடுமுறை மழையில் நனைந்தே முடிந்ததும் போனது.... தங்கையின் பிறந்தநாளும் அக்காவின் நிச்சயமும் அந்த நனைந்து போன விடுமுறையின் Highlights....

No comments: