Monday, August 11, 2008

பிந்த்ரா சுட்ட தங்கம்....

இந்த முறை ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் 'பதக்க வேட்டை' சற்று சீக்கிரமாகவே ஆரம்பித்துவிட்டது....

சென்ற முறை ராஜ்யவர்தன் சிங்க் ராதோர் வெள்ளி வென்ற போதும் அதற்கு முந்தய முறை கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலம் வென்ற போதும் அதற்கும் முந்தய முறை லியாண்டர் பயஸ் வெண்கலம் வென்ற போதும் நமது 'மெடல் வேட்டை' ஆரம்பம் ஆயிருந்தது.... ஆனால் என்னமோ அந்த வேட்டையில் நம் ஆட்கள் தேறவில்லை.... அந்த ஒன்றுக்கு மேலே முன்னேறவுமில்லை....

பொதுவாக நம் ஆட்கள் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றால் அவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கொடுத்து நம் அரசு கௌரவிப்பது வழக்கம்.... ஆனால் இவர் விஷயத்தில் அரசு சற்றே அவசரப்பட்டுவிட்டதென்று தோனுகிறது.... ஆமாம் இவர் அதை ஏற்க்கனவே வென்று விட்டார்.... பாவம் அரசு இவரை எப்படி கௌரவிக்க போகின்றது என்று தெரியவில்லை....

இவரை வைத்தே அடுத்த இருபது நாட்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் வியாபாரம் பார்த்து விடும்.... தொலைபேசி மூலம் இவரை.... நேரடியாக இவர் தந்தை, தாய், பாட்டி, தாத்தா, மாமா, ஒண்ணு விட்ட சித்தப்பா இப்படி அவருக்கு வேண்டியவர்கள் வேண்டாவதர்கள் அனைவரையும் பேட்டி கண்டு தொலைகாட்சியில் போட்டு காட்டுவார்கள்.... நம் மக்களும் (நீங்களும் நானும் உட்பட்ட எல்லோரையும் தான் குறிப்பிடுகிறேன்) வாயை பிளந்து அதை பார்த்து பெருமை படுவோம்.... தப்பி தவறி இன்னும் பதக்கம் வென்று விட்டால் இவர்களுக்கு கொண்டாட்டம் தான்....

நூறு கோடி மக்கள் உள்ள நம் நாட்டிலா இந்த அவல நிலை.... ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை நம் தமிழகத்தை காட்டிலும் குறைவு.... அனால் அவர்கள் அணியைச்சேர்ந்த ஒருவரே பல பதக்கங்களை வெல்கிறார்.... நம்மில் ஒருவர் ஒரு பதக்கம் வாங்குவதை நாம் இப்படி கொண்டாடுகிறோம்.... இது தான் விளையாட்டு துறையில் நம் நிலைமை.... கிரிக்கட்டில் மட்டும் நாம் புலி.... மீதியில் எல்லாம் எலி.... இல்லை அதற்கும் கீழ்.... இல்லாவிட்டால் நம் தேசிய விளையாட்டான ஹாக்கியில் நாம் இம்முறை தேறாமல் இருந்திருப்போமா.... (கிரிக்கெட்டிலும் நாம் எலி தானோ என்று இன்று முடிவடைந்த இலங்கை தொடர் ஓர் சந்தேகத்தை எழுப்புகுறது)

நம் ஆட்கள் 1984, 1988, 1992 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 'முட்டை' தான் போட்டார்கள்....1996 இல் சற்றும் எதிர்பார்க்காத டென்னிஸிலும் 2000 இல் சற்றே எதிர்பார்த்த பளு தூக்குதலிலும் 2004 இல் யாருமே எதிர்பாராத துப்பாக்கி சூட்டிலும் பதக்கம் வென்றோம்.... இந்த முறையும் எல்லோர் கவனமும் ககன் நாரங்கின் மேலும் சாயினாவின் மேலும் தான் இருந்தது.... எத்தனை பேர் இந்த இளைஞன் மேல் நம்பிக்கை வைத்தார்கள் என்று தெரியவில்லை....

ஒவ்வொருமுறையும் இந்தியாவுக்கு இப்படி ஒரு புதிய ஒலிம்பிக் நட்சத்திரம் உதிக்கின்றது.... அடுத்த முறை நம் நம்பிக்கையை வைப்பதற்காகவே.... அவர்கள் அதை தகர்ப்பதற்காகவே....

எது எப்படியானாலும் நாம் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்ஸில் ஒரு தங்கப்பதக்கம் வென்றுள்ளோம்.... முதல் முறையாக ஒரு தனி இந்திய மனிதன் தங்கம் வென்றுள்ளான்.... (இதற்க்கு முன்பு வென்ற தங்கம் எல்லாம் ஹாக்கியில் வென்றது)

தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு என் உள்ளமார்ந்த வாழ்த்துக்கள்.... இந்தியா இந்த ஒரு நாளாவது பதக்க பட்டியலில் முதல் 15 இடத்திர்க்குள்ளே இருக்க காரணமாயிருந்த பிந்திராவுக்கு என் நன்றிகள்....பதக்க வேட்டையை ஆரம்பித்து வைத்து.... இந்த முறை இந்தியா கண்டிப்பாக நிறையா பதக்கம் வெல்லும் என்று இந்தியர்களை நம்பிக்கையுடன் மார்தட்ட வைத்த பிந்த்ராவுக்கு என் Salute....

வேட்டை இந்த ஒரு தங்கத்தோடு நின்று விடாமல் இருந்தால் நன்று....

ஜெய் ஹிந்த்....

1 comment:

JSTHEONE said...

unnudan serndhu ennoduaiya salute um therivikkuren.... India kandippa more medals vaangum... as years passed our performance at olympics was awesome... see bronze then silver then gold... so lets rock.....