Monday, August 11, 2008

தமிழ் பாமரனின் பிள்ளையார் சுழி....

தமிழை பொறுத்த மட்டிலும் நான் ஒரு பாமரன்....முறையாக எழுத்தோ வாசித்தலோ நான் பயின்றதில்லை....

வளர்ந்ததெல்லாம் கேரள நாட்டில் ஆயதினால் பள்ளி சென்று தமிழ் கற்கவில்லை....பத்திரிக்கை மற்றும் அதனுடன் வரும் இணைப்புகள் மட்டுமே எனது தமிழ் குருக்கள்....அதனுடன் தாயின் ஊக்குவிப்பும் எனது விருப்பமும் தான் நான் தமிழ் எழுதுவதற்கும் படிப்பதற்கும் காரணம்....

இந்நாளில் எனது தமிழ் ஆர்வம் சற்று மேலோங்கித்தான் நிற்கிறது....கல்கியின் அழியாத காவியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் மற்றும் சுஜாதாவின் பிரிவோம் சிந்திப்போம் II மற்றும் பல சிறுகதைகள் வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது....அது என்னுள் தமிழ் ஆர்வத்தையும் தூண்டியது....

எந்த மொழியிலுமே எழுதவேண்டும் என்ற என்னமோ ஆர்வமோ எனக்கு இதற்க்கு முன்பு உண்டானதே கிடையாது....அனால் இப்பொழுது சில நாட்களாகவே அந்த ஒரு எண்ணம் உருவெடுத்து வந்துள்ளது....அதற்க்கு காரணம் என்னவென்று எனக்கு இன்னும் விளங்கவில்லை....

நண்பர்களின் BLOG வாசித்த பொது ஏன் நாமும் எழுதக்கூடாது என்று ஒரு எண்ணம் தோன்றும்....ஆனால் என்னால் அது முடியாது என்றும் ஒரு எண்ணம் அந்த எண்ணத்தை வெட்டி விடும்....இப்பொழுது இரண்டாவது எண்ணம் முதல் எண்ணத்தை வெட்டி விட்டத்தின் பலன் இந்த எழுத்து என்று தான் தோனுகிறது....

எது எப்படியோ....தமிழ் பாமரனான நானும் எதோ என் மனதில் தோன்றிய சிலவற்றை எழுத இங்கு வாய்ப்பு கிடைத்துள்ளது....இதில் ஆயிரம் சொற்குற்றம் அதற்கும் மேல் பல்லாயிரம் பொருட்குற்றமும் இருக்கலாம்....நீங்கள் உங்கள் கருத்துகளையும் திருத்தங்களையும் கூறி வாழ்த்தி என் வளர்ச்சிக்கு கை கொடுங்கள்....

நன்றி....

2 comments:

JSTHEONE said...

வ‌லைப் ப‌திவுக்கு த‌ங்க‌ள் வ‌ர‌வு ந‌ல்வ‌ர‌வு ஆக‌ட்டும் ... த‌ங்க‌ளிட‌ம் இருந்து இன்னும் நிறைய‌ எதிர்ப்பார்க்கும் மற்றொரு பாம‌ர‌ன்

க விக்னேஷ் said...

மிக்க நன்றி நண்பா....