Wednesday, November 4, 2009

என்னுயிரே...

நீ இருக்கும் திசையினை மட்டும்;
என் உள்ளம் இன்று உணர்கிறது...

வடக்கையே தேடும் காந்தம் போல்;
என் கண்கள் உன்னையே தேடுகிறது...

உன் காலடியின் சிறு ஓசைகளை;
என் செவிகள் நிச்சயம் அறிகிறது...

கரும் கூந்தல்வாழ் மல்லிகை வாசம்;
என் நாசி வழி இதையத்தையும் துளைக்கிறது...

ஏனெனில், காற்றில் கலந்த வார்த்தை போல்;
நேற்று, நீ எங்கோ தொலைந்து விட்டாய்...

ஆனால், கடலில் விழுந்த மழைத்துளி போல்;
அக்கணமே, என்னுள்ளே நீ கலந்து விட்டாய்...
என் உயிரிலேயே இணைந்து விட்டாய்...
என் உயிராகவே மாறி விட்டாய்...

1 comment:

MRP said...

உன்னுள் இப்படியோர் கவிஞன் பீர் அதித்து குப்புர படுத்திருன்தான் என எனக்கு தெரியாம போச்சே!!!!

On as serious note, this is fantastic job.....
Now, I would rather advice you to change your style somewhat so as to keep this blog alive for a longer time period...