நம் வாழ்க்கையெனும் வானத்தில்;
காதலெனும் கார்மேகம்;
ஆனந்த மழையாய் பொழியும் என்று நினைத்தேன்....
உன் அன்பு;
இதமான தென்றலாய் வீசும் என்று எதிர்பார்த்தேன்,
ஆனால் நீயோ மௌனம் எனும் சூறாவளியை வீசி;
காதல் கார்மேகத்தையும் கலைத்து;
என் நெஞ்சில் பேரிடியெனும் பரிசையும் தந்துவிட்டாய்....
ஆனால் பெண்ணே....
என் நினைவுகளில் மின்னலொளியாய் பதிந்த உன்னை;
அழிக்க எந்த சக்தியாலும் முடியாது....!!!
சிதறல்கள்
6 years ago